ADDED : ஜன 13, 2026 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். சிவகாசி ராஜராஜன் சேகரித்துள்ள பழங்கால பொருட்களானஅகப்பைக் கூடு , அந்தப் புற அழைப்பு மணி, நகை பெட்டி, கிளி, குதிரை பெண்களின் அணிகலன்கள், ராமர் பட்டாபிஷேக சிற்பம், சிம்மயாளி துாபக்கால், திருமண முக்காலி, வளரி ஆயுதம் என 2300 க்கும் மேற்பட்ட பொருட்களை கண்காட்சியில் வைத்திருந்தார்.
இதன் மூலம் பண்டைய கால தமிழர்களின் பண்பாடு நாகரிகம், கலாச்சாரம், வணிகம், போன்றவற்றை மாணவர்கள் அறிந்து கொண்டனர். விலங்கியல், வரலாறு, தமிழ்த்துறை மாணவர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டு பார்வையிட்டனர். தமிழ்த்துறை பேராசிரியர் தனுஜா நன்றி கூறினார்.

