ADDED : டிச 20, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:மதுரை காமராசர் பல்கலை அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக் கல்லுாரியில் நடந்தது. இதில் பங்கேற்ற சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியைச் சேர்ந்த கால்பந்து அணி மூன்றாவது இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி செயலர் செல்வராசன், இணை செயலர் ராஜேஷ், முதல்வர் பாலமுருகன் பாராட்டினர். கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் யோகேஸ்வரன், உதவி இயக்குனர்கள் சுதாகரன், ரெவீனா மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

