ADDED : பிப் 20, 2026 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பு மூலம் உண்டு உறைவிடப் பயிற்சி பெற்று, ஜே.இ.இ., முதல்நிலை தேர்வில் தகுதி பெற்ற 11 அரசுப்பள்ளி மாணவர்களை கலெக்டர் சுகபுத்ரா நேரில் அழைத்து பாராட்டினார். இரண்டாம் நிலை தேர்வுக்கு பயிற்சி செய்து தயார் படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர், பயிற்சி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அறிவுரை, ஆலோசனைகளை வழங்கினார்.
அடுத்த நிலை தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள், கையேடுகளை கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட நிலை உயர் அலுவலர்கள், கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

