ADDED : செப் 10, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், செப். 11-
ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 30 பேர் விருதுநகர் நோபல் பள்ளியில் நடந்த மண்டல அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் மாணவர்கள் 15 பேர் முதலிடம், 10 பேர் இரண்டாமிடம், 5 பேர் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
சாதனை மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி மற்றும் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
