ADDED : டிச 17, 2025 06:06 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கமிஷனர் குமார் தலைமை வகித்தார்.
சுகாதார அலுவலர் கந்தசாமி முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் சால்வை அணிவித்து தூய்மை பணியாளர்களை கவுரவித்தார். தூய்மை இந்தியா இயக்க பரப்புரையாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
