/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அம்மா உணவகங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உணவு விற்கப்படுகிறதா
/
அம்மா உணவகங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உணவு விற்கப்படுகிறதா
அம்மா உணவகங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உணவு விற்கப்படுகிறதா
அம்மா உணவகங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உணவு விற்கப்படுகிறதா
ADDED : ஆக 10, 2025 02:30 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் உணவு விற்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை நகராட்சி நிர்வாகங்கள் கண்டு கொள்ளாமலும், போதிய நிதி ஒதுக்காமலும் உள்ளதால் குழப்பம் நிலவுகிறது.
தமிழக அரசால் 2013ல் அம்மா உணவகம் எனும் மலிவு விலை உணவகங்கள் மறைந்த முதல்வர் ஜெ. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இட்லி ரூ.1க்கும், பொங்கல் ரூ.3க்கும், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை ரூ.5க்கும் விற்கப்பட்டது.
பெருநகரங்களில் சப்பாத்தியும் விற்கப்பட்டது. இந்நிலையில் 2021ல் ஆட்சி மாற்றத்திற்கு பின் அம்மா உணவகங்கள் மூடப்படாது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் தி.மு.க., அரசு மறைமுகமாக அம்மா உணவகங்களுக்கு போதிய நிதி அளிக்காமலும், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளம், பொருட்கள் வழங்காமலும், கிரைண்டர் உள்ளிட்டவை பழுதானால் கண்டுக்காமல் இருந்தது. நகராட்சி நிர்வாகங்களும் அலட்சியம் செய்தன. இதன் வெளிப்பாடாக முன்பு சுவையாக கிடைத்த உணவு வகைகள் தற்போது பெயருக்கு கிடைக்கிறது. சிலவற்றில் விலை அதிகமாக விற்பது போன்றவை நடந்தன.
சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு வாங்க சென்றவரிடம் ரூ.20 பெறப்பட்டுள்ளது. அவர் வீடியோ எடுத்து வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் தான் உணவு விற்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பது அவசியமாகி உள்ளது.
அதே நேரம் நகராட்சிகள் தேவையான நிதியை ஒதுக்காமல் அலட்சியம் செய்வதால் பெண் ஊழியர்கள் மளிகை பொருட்களை வாங்குவதை கணக்கில் கொண்டு இவ்வாறு வசூலிப்பதாக கூறப்படுகிறது.
அரசு நிர்ணயித்த விலையில் விற்பது எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நகராட்சி நிர்வாகங்கள் நிதி ஒதுக்குவதும். எனவே மாவட்ட நிர்வாகம் இதை கண்காணிக்க வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு இடமின்றி ஏழை மக்கள் வயிறாறும் இடமாக அம்மா உணவகங்கள் மாற வேண்டும்.