sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம்

/

சாத்துாரில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம்

சாத்துாரில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம்

சாத்துாரில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம்


ADDED : ஜூலை 29, 2025 05:23 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 05:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்; சாத்துாரில் த.வெ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளருடன் கட்சியினர் வாக்குவாதம் செய்து வெளிநடப்பு செய்தனர்.

த.வெ.க. விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் சாத்துாரில் நடந்தது. சாத்துார் ,அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதிக்குட்பட்ட நகர ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் சின்னப்பரிடம் கூட்டம் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி வாக்குவாதம் செய்தனர்.

அதற்கு மாவட்ட செயலாளர் முறைப்படி நகர ஒன்றிய நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உங்கள் பகுதி நகர ஒன்றிய நிர்வாகிகளிடம் நான் முறையாக தகவல் தெரிவித்து விட்டேன் என்று கூறியுள்ளார். மாவட்ட நிர்வாகிகள் தங்களை மதிப்பதில்லை என கூறிய அவர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். தொடர்ந்து அக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us