ADDED : ஜூன் 21, 2025 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன் 24. இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இது போன்ற குற்றச்சம்பவங்களின் தொடர்ந்து ஈடுபடாமல் இருக்கவும் குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டும் தங்கபாண்டியன் மீது குண்டத்தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க எஸ்.பி கண்ணன் பரிந்துரையின்படி கலெக்டர் ஜெயசீலன் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.