ADDED : பிப் 23, 2026 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் தேசிய அளவில் விண்விண் 2026 என்ற தலைப்பில் மேலாண்மையியல், கலைத்திறன் போட்டிகள் கல்லுாரி தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது.
மதுரை, சிவகாசி, அருப்புக்கோட்டை, துாத்துக்குடியில் இருந்து 131 மாணவர்கள் பங்கேற்றனர். சிவகாசி தொழிலதிபர் ஹரிராம் சுந்தரவேல் பங்கேற்றார். இதில் உபதலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, செயலாளர் மகேஷ்பாபு, பொருளாளர் குமரன், கல்லுாரி முதல்வர் சாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

