ADDED : பிப் 25, 2026 07:18 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே முன்னாள் சென்னை மாகாண முதல்வர் பி.எஸ் குமாரசாமி ராஜா திரு உருவ படத்தை சட்டசபையில் திறக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் கூட்டுறவு வங்கி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா முன்னிலை வகித்தார். செயலாளர் அம்மையப்பன் வரவேற்றார். ஊர்க்காவல் படை மண்டல தளபதி ராம்குமார் ராஜா, ராஜாஜி இலவச மருத்துவ மைய தலைவர் ராஜாராம், முன்னாள் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினர், விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட கலெக்டர் அலுவலக புது கட்டடத்தில் பி.எஸ்.கே சிலை, உருவப்படம் வைக்க வேண்டும். சட்டப்பேரையில் பி.எஸ்.கே முழு உருவப்படம் திறந்து வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. சமூக ஆர்வலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

