ADDED : ஆக 14, 2025 02:27 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். பதிவாளர் வாசுதேவன் வரவேற்றார்.
முகாமில் டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சந்திரன், துணைவேந்தர் நாராயணன், மாணவர் நல இயக்குனர் பாலகண்ணன் பேசினர்.
மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர். கிருஷ்ணன் கோவில் சப் இன்ஸ்பெக்டர் மதி வாணன் நன்றி கூறினார்.
