ADDED : ஜூன் 07, 2026 01:56 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே சேது ராஜபுரம், பெரியநாயகிபுரம் கிராமங்களில் விளை நிலங்களை காக்கும் இயக்கம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் நாச்சியார் தலைமை வகித்தார். வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்பிரமணியம் தொழில்நுட்பம் பற்றி பேசினார். திட்டத்தின் நோக்கம் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுந்தரவல்லி, வேளாண் அலுவலர் துர்கா தேவி ஆகியோர் விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். மண்ணியல் குறித்து தொழில் நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
