ADDED : ஏப் 13, 2026 06:06 AM
அ நிறம் | அளவு
திருச்சுழி: திருச்சுழி அரசு கலைக்கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஓவியம், ரங்கோலி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாதிரி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, மாணவர்களுக்கு கையெழுத்து இயக்கம், வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
சுய உதவி குழு உறுப்பினர்கள் மூவர்ண ஆடை அணிந்து கோலாட்டம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தினர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கேசவதாசன், மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மினி கலந்து கொண்டனர்.
