ADDED : ஏப் 25, 2025 06:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் மே 1ல் கல்லுாரிக்கனவு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடக்கிறது.
பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்விச் சேர்க்கையை வலியுறுத்தி நடைபெறும், இதில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். அதிகாலை 5:00 மணிக்கு நேரடியாக கலந்து கொள்ளலாம்.
கலந்து கொள்ளும் முதல் 1000 மாணவர்களுக்கு டி-சர்ட் பரிசாக வழங்கப்படும். முதல் பரிசு ரூ.40 ஆயிரம், 2ம் பரிசு ரூ.30 ஆயிரம், 3ம் பரிசு ரூ.15ஆயிரம், 4ம் பரிசு - ரூ.10 ஆயிரம், 5ம் பரிசு - ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். விபரங்களுக்கு 96988 -10699 எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

