ADDED : மார் 10, 2024 05:14 AM

அ நிறம் | அளவு
சிவகாசி, : சிவகாசி அருகே எரிச்சநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு, மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியர் இந்துராணி தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் முத்துப்பாண்டி, வி.ஏ.ஓ., மனோகரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலம் பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிந்தது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் பெருமாள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகன், கல்வியாளர் சின்ன குருசாமி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ராஜேஸ்வரி, உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
