ADDED : மார் 14, 2024 03:02 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் சைபர் கிரைம் தொடர்பான இணைய வழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் நடந்தது. இந்த ஊர்வலம் விருதுநகர் எம்.ஜி.ஆர்., சிலையில் துவங்கி, நகராட்சி அலுவலக ரோடு, தெப்பம், தேசபந்து மைதானம் வழியாக வந்து பழைய பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது.
விருதுநகர் டி.எஸ்.பி., பவித்ரா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, போலீஸ் எஸ்.ஐ.,க்கள், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மக்களுக்கான சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930, www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியும் தெரிவிக்கப்பட்டது.
