ADDED : மார் 21, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டையில் பல்நோக்கு சமூக சேவை, விருதுநகர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு, சமூக சேவா சங்கம் சார்பாக மகளிர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சேவா சங்கச் செயலாளர் கபிரியேல் துவக்கி வைத்தார். பின் நடந்த கருத்தரங்கில் குழந்தைகள் நல குழு தலைவர் கங்கா, மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பூமா, சமூக ஆர்வலர் கவிதாகுமாரி, குருகுல ஒளி ஒருங்கிணைப்பாளர் இயற்கையம்மாள், பல்நோக்கு உதவியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொருட்செல்வி ஞானம் செய்தனர்.

