ADDED : ஜன 15, 2026 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: ஜன. 15- -: அருப்புக்கோட்டை எஸ்.டி.ஆர்.என்., அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா, போதை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வராஜ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் முத்து லட்சுமி, துணைத் தலைவர் அழகு லட்சுமி முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை பரமேஸ்வரி வரவேற்றார். போதை விழிப்புணர்வு ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக நடத்தப்பட்டது.
ஊர்வலத்தை ஆர்.டி.ஓ., மாரிமுத்து துவக்கி வைத்தார். நுகர்வோர் உரிமைகள் அமைப்பின் மாநில தலைவர் அழகுசுந்தரம், நுகர்வோர் குழு அமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி பேசினர்.

