ADDED : மார் 23, 2026 07:14 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் சட்டசபை தேர்தல் - 2026ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் நுாறு சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுகபுத்ரா துவக்கி வைத்தார்.
மக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டு பிரசுரங்களை வழங்கிப் பேசினார். வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிப்போம், நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம், ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர்.
