ADDED : ஏப் 04, 2026 06:41 AM
அ நிறம் | அளவு
சாத்துார்:சாத்துாரில் என் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம்நடந்தது.
தாலுகா அலுவலகத்தில் வைத்து ஆர்.டி.ஓ. கனகராஜ் கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.டி.எஸ்.பி குருசாமி முன்னிலை வகித்தார்.தாசில்தார் வடிவேலு வரவேற்றார். ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை, அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேராசிரியர்கள் வருவாய்த் துறையினர் மக்கள் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
