ADDED : மார் 08, 2026 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் சமூகநலத்துறை சார்பில் 2026 சட்டசபை தேர்தலில் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும், அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப் பட்டது.
மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். அரசு அலுவலர்கள், கிராமப்புற செவிலியர்கள், மக்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.தொடர்ந்துஎனது ஓட்டு, எனது மாவட்டம், எனது பொறுப்பு என்ற மையக்கருத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, கலெக்டர் முதல் கையெழுத்திட்டுப் துவங்கி வைத்தார்.மாவட்ட சமூக நல அலுவலர் திலகம், தேர்தல் தாசில்தார் சீனிவாசன், துறை சார் அரசு அலுவலர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

