ADDED : ஜூலை 04, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச நெகிழிப்பைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் முதல்வர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் நடந்தது.
நிர்வாக குழு உறுப்பினர்கள் குணசேகரன், முனியாண்டி, ரஞ்சித், ஆனந்த், காவல்துறை அதிகாரி சுரேஷ் குமார் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். தமிழ் ஆசிரியர் சுந்தர் , மாணவர்கள் விழிப்புணர்வு கோசமிட்டடவாறே முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். பள்ளித்தாளாளர் வெங்கடாசலபதி பாராட்டு தெரிவித்தார்.