நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் நோபிள் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் பேசினார். இதில் கல்லுாரி நிறுவனர் ஜெரால்டு ஞானரத்தினம், கல்லுாரி முதல்வர் வேல்மணி, துணை முதல்வர் செல்வம் முன்னிலை வகித்தனர். இதில் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமாரி, ஆர்.டி.ஓ., முத்துக்கழுவன், அருப்புக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.