sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதம் அடைந்த இடத்தில் வைக்கப்பட்ட பேரிகார்டு :தினமும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

சேதம் அடைந்த இடத்தில் வைக்கப்பட்ட பேரிகார்டு :தினமும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சேதம் அடைந்த இடத்தில் வைக்கப்பட்ட பேரிகார்டு :தினமும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சேதம் அடைந்த இடத்தில் வைக்கப்பட்ட பேரிகார்டு :தினமும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : நவ 01, 2025 05:35 AM

Google News

ADDED : நவ 01, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு பகுதியில் சேதம் அடைந்த இடத்தில் பேரிகார்டு வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசி சாட்சியாபுரம் மேம்பாலம் பணிகள் நடந்து வருவதை ஒட்டி வேலாயுத ரஸ்தா ரோடு முக்கிய மாற்றுப் பாதையாக உள்ளது. அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டில் தான் சென்று வருகின்றன.

இந்த ரோட்டை கடந்து தான் ரயில்வே ஸ்டேஷன், அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

இங்கு ஆங்காங்கே ரோடு சேதமடைந்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அருகே ரோடு சேதம் அடைந்து மிகப்பெரிய பள்ளமாக மாறிவிட்டது. இதனை மறைப்பதற்காக தற்காலிகமாக பேரிகார்டு வைக்கப் பட்டுள்ளது.

இதனால் ரோடு குறுகிய நிலையில் டூ வீலர்கள் சென்று வருவதே சிரமமாக உள்ளது. கார் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் தட்டுத் தடுமாறியே செல்ல வேண்டியுள்ளது. தவிர இரவில் டூவீலர்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்திலும் சிக்குகின்றனர். எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us