sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காலி மது பாட்டில்களை வீசும் இடமாக மாறிய குளியல் தொட்டி

/

காலி மது பாட்டில்களை வீசும் இடமாக மாறிய குளியல் தொட்டி

காலி மது பாட்டில்களை வீசும் இடமாக மாறிய குளியல் தொட்டி

காலி மது பாட்டில்களை வீசும் இடமாக மாறிய குளியல் தொட்டி


ADDED : ஆக 14, 2025 11:24 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ஆத்திப்பட்டி ஊராட்சி. ஊராட்சி அலுவலகத்திற்கு அருகில் மக்களின் பயன்பாட்டிற்காக பல லட்சம் செலவில் குளியல் தொட்டி கட்டப்பட்டது.

கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமலேயே பராமரிப்பு இன்றி சேதமடைந்து விட்டது. தண்ணீர் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இங்கு வந்து அமர்ந்து குடித்துவிட்டு காலியான மது பாட்டில்களை குளியல் தொட்டியில் வீசிவிட்டு செல்கின்றனர்.

ஜனவரி 2025 ல், ஊராட்சி தலைவர் பதவி முடிந்தவுடன், ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் முறையாக நடக்கவில்லை. பராமரிப்பு இல்லாத குளியல் தொட்டியை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. 3.50 லட்சம் நிதியில் கட்டப்பட்ட கழிப்பறையும் மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வளர்ச்சி பணிகளை முறையாக ஆய்வு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us