ADDED : பிப் 25, 2026 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவன துணைத் தலைவர் கிருஷ்ணகுமார், சான்மினா நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி ரூ.7.5 லட்சத்தில் பேட்டரி காரை நோயாளிகளின் பயன்பாட்டிற்காக டீன் ஜெயசிங் தலைமையில் எஸ்.பி., கண்ணன் முன்னிலையில் வழங்கினர்.
இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, துணை மருத்துவ கண்காணிப்பாளர் சரவணன், நிலைய மருத்துவ அலுவலர் வைஷ்ணவி, உதவி நிலைய மருத்துவ அலுவலர் கார்த்திக்கேயன், டி.எஸ்.பி., யோகேஷ் குமார் பங்கேற்றனர்.

