ADDED : ஆக 28, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் கீழரத வீதியில் இருந்து ஆண்டாள் கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில், 25 அடி உயர ஆர்ச் அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.
பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்தகால் நட்டனர். விழாவில் அறங்காவலர் மனோகரன், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையர் இளங்கோவன், செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.