ADDED : ஆக 16, 2026 11:41 PM

அ நிறம் | அளவு
ராஜபாளையம்: வந்தே மாதரம் பாடலை அவமதித்த காங்., தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, லோக்சபா காங்., தலைவர் சோனியா, எம்.பி., ராகுல் ஆகியோரை கண்டித்து விருதுநகர் பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜபாளையத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் காங்., சோனியாவை கண்டித்து கண்டன ஊர்வலம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரை தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணி ஸ்ரீகாந்த், செயலாளர் மாதவராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். விருதுநகரில் மாவட்ட அமைப்பாளர் தினேஷ்குமார் தலைமையில் நிர்வாகிகள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
