நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நல பணித்திட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
முதல்வர் கோபாலகிருஷ்ணன் முகாமினை துவக்கி வைத்தார். தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி ஜெசிலியா ஏஞ்சலின் ரத்த தானம் குறித்து பேசினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கருப்பசாமி, பாண்டியராஜ், ராதா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.