/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புத்தகத் திருவிழா 3 நாட்கள் நீட்டிப்பு
/
புத்தகத் திருவிழா 3 நாட்கள் நீட்டிப்பு
ADDED : அக் 08, 2024 04:32 AM
விருதுநகர் : விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் நடந்து வரும் புத்தகத் திருவிழா 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம்(பபாசி) இணைந்து மதுரை ரோட்டில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செப். 27 முதல் அக். 7 வரை திட்டமிடப்பட்டு 3வது விருதுநகர் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது.
அதன்படி விருதுநகர் 3வது புத்தகத் திருவிழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் வர விரும்புவதாலும், கல்லுாரி மாணவர்கள் பார்வையிடுவதற்காகவும் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று மேலும் மூன்று நாட்கள் அக். 10 வியாழன் மாலை வரை புத்தகக் கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இப்புத்தகத் திருவிழாவில் மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

