
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டியில் கவிஞர் பொற்கைபாண்டியன் கவிதா மண்டலம் சார்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய 'ஒரு நூற்றாண்டு தவம்' எனும் நூல் அறிமுக விழா கவிஞர் சுரேஷ் ராமலிங்கம் தலைமையில் நடந்தது.
கவிஞர் பொற்கைபாண்டியன் நூலை அறிமுகப்படுத்த அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலாளர் டாக்டர் சரவணன் பெற்றுக்கொண்டார். அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜவர்மன், எதிர்கோட்டை சுப்பிரமணியன், நிர்வாகிகள் மணிமேகலை, சிவசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், வில்லிசை கலைஞர் லட்சுமணபெருமாள், கவிஞர்கள் சுப்பிரமணியம், சிவா, முத்துமுருகன், ராஜா, தொல்காப்பியன் உட்பட பலர் பேசினர்.

