ADDED : ஜன 08, 2026 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு இந்து மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சடையாள் முனியாண்டி, பாபு பிரசாத் ஆகியோர் எழுதிய, மூடி திறந்த பேனா என்ற கவிதை நுால் வெளியீட்டு விழா நடந்தது.
பள்ளி தலைவர் ஜானகி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராஜசேகர் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன் வெளியிட பள்ளி செயலர் சுதாகர், சத்திரம் கமிட்டி உறுப் பினர் சாவித்திரி ஆகியோர் நூலினை பெற்றுக் கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி செய்திருந்தார்.

