sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு பஸ்களில் தடையை மீறி மீண்டும் பாடல்கள் சர்வ சாதாரணமாக ஒலிபரப்பு அதிகாரிகள் ஆய்வு தேவை  

/

அரசு பஸ்களில் தடையை மீறி மீண்டும் பாடல்கள் சர்வ சாதாரணமாக ஒலிபரப்பு அதிகாரிகள் ஆய்வு தேவை  

அரசு பஸ்களில் தடையை மீறி மீண்டும் பாடல்கள் சர்வ சாதாரணமாக ஒலிபரப்பு அதிகாரிகள் ஆய்வு தேவை  

அரசு பஸ்களில் தடையை மீறி மீண்டும் பாடல்கள் சர்வ சாதாரணமாக ஒலிபரப்பு அதிகாரிகள் ஆய்வு தேவை  


ADDED : மே 22, 2025 12:24 AM

Google News

ADDED : மே 22, 2025 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் அரசு பஸ்களில் பாடல்கள் ஒலிபரப்பும் ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது பல அரசு பஸ்களில் மீண்டும் ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்கள் பொருத்தப்பட்டு பாடல்கள் ஒலிபரப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் மொத்தம் 462 பஸ்கள் உள்ளது. இதில் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது. இவற்றில் பயணிகளை பாதிக்கக்கூடிய அளவிற்கு அதிக ஒலியுடன் பாடல்கள் ஒலிபரப்புவதோடு சில பஸ்களில் கேலி, கிண்டல் செய்வது போலவும், இரட்டை அர்த்தங்களில் ஆபாச பாடல்கள், ஜாதிய ரீதியான பாடல்கள் ஒலி பரப்புவதாக மக்களிடம் இருந்து அரசு போக்குவரத்து கழகத்திற்கு புகார்கள் வந்தது.

இதனால் அனைத்து அரசு பஸ்களிலும் தன்னிச்சையாக ஒட்டுநர், கண்டக்டர்களால் வைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள்,ஆடியோ சிஸ்டம்களை அகற்ற வேண்டும் என கடந்தாண்டு டிசம்பரில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஆடியோ சிஸ்டம்கள் அரசு பஸ்களில் இருந்து அகற்றப்பட்டது.

ஆனால் தற்போது ஐந்து மாதங்கள் கடந்து விட்டதால் பல அரசு பஸ்களில் மீண்டும் டிரைவர், கண்டக்டர்களால் தன்னிச்சையாக ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்கள் பொருத்தப்பட்டு பாடல்கள் ஒலிபரப்பு ஆகிறது.

மேலும் புதிதாக வழங்கப்பட்ட அரசு பஸ்களிலும் பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இதனால் கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் தடையை மீறி வைக்கப்பட்டுள்ள பாடல்கள் ஒலிபரப்பும் ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்களை பறிமுதல் செய்து அச்செயல்களில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்கள் மீது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us