sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 உற்பத்தியை புறக்கணிக்க கறிக்கோழி சங்கம் தீர்மானம்

/

 உற்பத்தியை புறக்கணிக்க கறிக்கோழி சங்கம் தீர்மானம்

 உற்பத்தியை புறக்கணிக்க கறிக்கோழி சங்கம் தீர்மானம்

 உற்பத்தியை புறக்கணிக்க கறிக்கோழி சங்கம் தீர்மானம்


ADDED : டிச 30, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: பண்ணை கறிக்கோழி விலையை கிலோவிற்கு, 20 ரூபாயாக உயர்த்தக்கோரி, 2026 ஜன., 1 முதல், உற்பத்தி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக, ஒருங்கிணைந்த கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர்.

விருதுநகர் மாவட்டம், சாத்துாரில் ஒருங்கிணைந்த கறிக்கோழி பண்ணை உற்பத்தியாளர்கள் நலச் சங்க கூட்டம், மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. பொருளாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் கணேசன் வரவேற்றார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பண்ணையில் வளர்க்கப்படும் கறிக்கோழிக்கு, பி.சி.சி.ஐ., 1 கிலோவுக்கு 6.50 ரூபாய் விலை நிர்ணயித்தது. பத்தாண்டுகளாக இந்த விலையை உயர்த்தவில்லை.

தற்போது கறிக்கோழி பண்ணையை பராமரிக்கும் ஊழியர்களுக்கு ஊதியம் உள்ளிட்டவை உயர்ந்துள்ள நிலையில் பி.சி.சி.ஐ., பண்ணையில் வாங்கப்படும் கறிக்கோழியின் விலையை மட்டும் உயர்த்தவில்லை.

பண்ணைகளில் கறிக்கோழிக்கு வழங்கப்படும் விலையை, 1 கிலோவிற்கு 20 ரூபாயாக உயர்த்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி 2026 ஜன., 1 முதல் மாநிலம் தழுவிய அளவில், உற்பத்தி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us