ADDED : செப் 13, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி அலுவலகம் ரோட்டில் தபால் அலுவலகம் முன்பிருந்த வேப்ப மரத்தின் கிளை ஒன்று, நேற்று காலை எவ்வித காற்றும் இல்லாத நிலையில் திடீரென முறிந்து விழுந்தது.
அந்நேரம் அப்பகுதியில் வாகனங்களோ, மக்களோ செல்லாததால் விபத்துக்கள் ஏற்படவில்லை. தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர்.
இந்த ரோட்டில் உள்ள சில மரங்களின் கிளைகள் முறிந்து தொங்குகிறது. இதனை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
