UPDATED : மே 14, 2026 07:29 PM
ADDED : மே 14, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:உ.பி., மாநிலம் நொய்டாவில் தொழிலாளர்கள் கூலி உயர்வு, ஒப்பந்தமுறையை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். இத்தொழிலாளர்களை அங்குள்ள பா.ஜ., அரசு போலீஸ்துறை மூலம் தடியடி தாக்குதல், கைது செய்து வருவதை கண்டித்து விருதுநகரில் பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயீஸ் யூனியன், ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்டத் தலைவர் இளமாறன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் கணேசமூர்த்தி பேசினார். மாவட்ட செயலாளர் குருசாமி நன்றிக்கூறினார்.
