ADDED : ஜன 09, 2026 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் பாரத்நெட் திட்டத்தின் கீழ் இணைய சேவைகளை வழங்க தகுதியான தொழில் பங்கீட்டாளர்கள் ஜன. 14க்குள் விண்ணப்பிக்கலாம்.
மாநிலத்தில் பாரத்நெட் பணிகள் 95 சதவீதம் வரை முடிந்துள்ளன வட்டாரங்களை துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர். பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை வழங்குதல், ஓ.எப்.சி., பராமரிப்பு பணிகள், எஸ்.எல்.ஏ., விதிமுறைகளை பின்பற்றுதல் ஆகியவை முக்கிய பணிகள்.
https://tanfinet.tn.gov.in என்ற தளத்தில் ஜன. 14க்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்கள், சந்தேகங்களுக்கு 044 - 2496 5595 என்கிற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

