ADDED : டிச 13, 2024 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி அருகே சூச்சனேரியில் தனியார் சோலார் பிளான்ட் நிறுவனம் உள்ளது.
இதில் குலசேகரநல்லுாரை சேர்ந்த அய்யனார்மூர்த்தி 38, பிளான்ட் பராமரிப்பு பொறுப்பாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு திருச்சுழியை சேர்ந்த பாலமுருகன், நெல்லிகுளத்தை சேர்ந்த காளிமுத்து, வீரமணி, முத்துகருப்பையா ஆகிய நால்வரும் பிளான்ட்டில் புகுந்து அங்கிருந்த 10 பேனல்கள், 8 சி.சி.டி.வி., கேமராக்களை அடித்து நொறுக்கினர். சத்தம் கேட்டு ஓடி வந்த ஊழியர்களை பார்த்ததும் ஓடி விட்டனர்.
திருச்சுழி போலீசில் அய்யனார்மூர்த்தி புகார் செய்தார். போலீசார் தப்பி ஓடிய நால்வரில் பாலமுருகன், முத்து கருப்பையாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

