/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிப்.20 முதல் பசு, எருமை கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்
/
பிப்.20 முதல் பசு, எருமை கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்
பிப்.20 முதல் பசு, எருமை கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்
பிப்.20 முதல் பசு, எருமை கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி முகாம்
ADDED : பிப் 18, 2025 04:23 AM
விருதுநகர் : தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பசு, எருமை கன்றுகளுக்கு பிப். 20 முதல் கருச்சிதைவு நோய் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
புரூசெல்லோசிஸ் என்பது பசு, எருமை மாடுகளுக்கு கருச்சிதைவு, மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது புரூசெல்லா அபார்ட்ஸ் என்ற பாக்டீரியாவினால் ஏற்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சல், சினை ஈன்றும் தருவாயில் கருச்சிதைவு ஏற்படும்.
மேலும் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைந்து உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு உண்டாகும்.
நோயினால் பாதிக்கப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி ஆகியவற்றை கையாளும் பட்சத்தில் மனிதர்களுக்கும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூலம் 4 மாதம் முதல் 8 மாதம் வயதுடைய பெண் கன்றுகளுக்கு மட்டும் கருச்சிதைவு நோய் தடுப்பூசி பிப். 20ல் துவங்கி மார்ச் 19 வரை செலுத்தப்படுகிறது. இதன் மூலம் கருச்சிதைவு நோய் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்க முடியும்.

