UPDATED : ஆக 23, 2026 05:32 PM
ADDED : ஆக 23, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி ஞானகிரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 54.
இவர் செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் மிஷின் டிரேடிங் கம்பெனி நடத்தி வருகிறார். தனக்கு சொந்தமான காரை நேற்று கம்பெனிக்கு எதிரே ரோட்டில் நிறுத்தி இருந்தார். இந்நிலையில் அந்தக் கார் காலை 11:30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
