நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் டிரைவர் ராஜ்குமார் 35.
தனது நண்பர் கருணாகரனின் காரை தற்காலிகமாக வாங்கி ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு காரை சர்ச் அருகே நிறுத்தினார். அதிகாலை 1:00 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராகுல், ஜேம்ஸ்கேம்ரூன், பாண்டியராஜன் ஆகியோர் காருக்கு தீ வைத்தனர். சூலக்கரை போலீசார் மூவர் மீது வழக்கு பதிந்தனர்.