sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வெம்பக்கோட்டை ஆலை வெடி விபத்து மூன்று பேர் மீது வழக்கு: இருவர் கைது

/

வெம்பக்கோட்டை ஆலை வெடி விபத்து மூன்று பேர் மீது வழக்கு: இருவர் கைது

வெம்பக்கோட்டை ஆலை வெடி விபத்து மூன்று பேர் மீது வழக்கு: இருவர் கைது

வெம்பக்கோட்டை ஆலை வெடி விபத்து மூன்று பேர் மீது வழக்கு: இருவர் கைது


ADDED : ஜூலை 19, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: வெம்பக்கோட்டை செவல்பட்டி சரவணா பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

துலுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு சொந்தமான சரவணா பட்டாசு ஆலை செவல்பட்டியில் உள்ளது. நேற்று முன்தினம் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வரும் பேர் நாயக்கன்பட்டிகொங்கலாபுரம் ஜெயராம், 37. பீடி குடித்த போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்து சிவகாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் மாட்டு தொழுவத்தில் இருந்த பட்டாசு கழிவுகள் எரிந்தன.

வெம்பக் கோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

வி.ஏ.ஓ., சீனி ராஜ் புகார் படி ஆலை உரிமையாளர் துலுக்கன் குறிச்சி சரஸ்வதி, இவர் மகன் மேலாளர் கார்த்திக் செல்வம், 29. குத்தகைதாரர் விஜய கரிசல்குளம் சக்திவேல், 45. ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து மேலாளர், குத்தகைதாரர் ஆகிய இருவரை வெம்பக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us