ADDED : நவ 14, 2025 03:57 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, அவரின் தந்தை
நடராஜன் நினைவாக தாயார் சாந்தகுமாரி நன்கொடையாக அளித்த 50 நாற்காலிகளை டீன் ஜெயசிங் பெற்றுக்கொண்டார். இதில் துணை மருத்துவ கண்காணிப்பாளர் அன்புவேல், நிலைய மருத்துவ அலுவலர் வைஷ்ணவி, உதவி நிலைய மருத்துவ அலுவலர் வரதீஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.
