/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில் சேவையில் மாற்றம்: * பகுதி ரத்து
/
ரயில் சேவையில் மாற்றம்: * பகுதி ரத்து
ADDED : ஏப் 24, 2025 03:04 AM
விருதுநகர்:திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக ரயில் சேவையில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஏப். 26 இரவு 8:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மதுரை புறப்படும் ‛அமிர்தா' ரயில் (16343), மாவேலிக்கரா, செங்கன்னுார், திருவல்லா, கோட்டயத்திற்கு பதில் ஆலப்புழா வழியாக மாற்றுப் பாதையில் செல்லும்.
மதுரையில் இருந்து ஏப். 26 காலை 11:35 மணிக்கு புறப்படும் குருவாயூர் ரயில் (16327), விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். கொல்லம் -- குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஏப். 27 அதிகாலை 5:50 மணிக்கு குருவாயூரில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை ரயில் (16328), கொல்லத்தில் இருந்து மதியம் 12:10 மணிக்கு புறப்படும்.

