ADDED : மே 31, 2026 01:40 AM

அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேணுகோபாலசுவாமி கோயிலில் வைகாசி வசந்த விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
கோயிலில் வசந்த விழாவை ஒட்டி மே 23ல் கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் சாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.
நேற்று மாலை நடந்த தேரோட்டத்தை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., வடம் பிடித்து துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.
