sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

எதிர்கோட்டை காயல்குடி ஆற்றில் சேதமடைந்தது தடுப்பணை

/

எதிர்கோட்டை காயல்குடி ஆற்றில் சேதமடைந்தது தடுப்பணை

எதிர்கோட்டை காயல்குடி ஆற்றில் சேதமடைந்தது தடுப்பணை

எதிர்கோட்டை காயல்குடி ஆற்றில் சேதமடைந்தது தடுப்பணை


ADDED : நவ 17, 2024 05:37 AM

Google News

ADDED : நவ 17, 2024 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் எதிர்கோட்டை வழியாகச் செல்லும் காயல்குடி ஆற்றில் அமைக்கப்பட்ட தடுப்பணை சேதம் அடைந்துள்ளதால் தண்ணீர் தேங்குவதற்கு வழி இன்றி குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ராஜபாளையம், மாதாங்கோவில் பட்டி, புலிப்பாறைப்பட்டி, திருவேங்கடபுரம், நதிக்குடி, எதிர்கோட்டை வழியாக காயல் குடி ஆறு சென்று வெம்பக்கோட்டை அணையில் சேர்கிறது. இந்த காயல்படி ஆற்றை நம்பி எதிர்கோட்டையில் 400 ஏக்கரில் சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றது. இதற்காக எதிர்கோட்டையில் 1994 ல் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது.

இதனால் இப்பகுதியில் விவசாயம் செழித்ததோடு குடிநீர் ஆதாரமும் கிடைத்து வந்தது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை சேதம் அடைந்து விட்டது. இதனால் ஆற்று தண்ணீர் வந்து அதனை தேக்க முடியாமல் வெளியேறி விடுகின்றது. தற்போது விவசாயத்திற்கு தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக சேதம் அடைந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us