/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சொக்கர் கோயில் திருக்கல்யாணம்
/
சொக்கர் கோயில் திருக்கல்யாணம்
ADDED : பிப் 28, 2026 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோயிலில் மாசி மக பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிப்.21-ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவின் ஏழாம் நாளான நேற்று திருக்கல்யாணம் காலை 9:00 மணிக்கு நடந்தது. முன்னதாக சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சிக்கும் அபிஷேகங்கள் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்தது. திரளானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. தெப்பபோற்ஸவம் இன்றும், தேரோட்டம் நாளையும் நடக்கிறது.
ஏற்பாடுகளை ராம்கோ குழுமத்தினர் செய்திருந்தனர்.

