sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விஜயகரிசல் குளம் அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு

/

விஜயகரிசல் குளம் அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு

விஜயகரிசல் குளம் அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு

விஜயகரிசல் குளம் அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுப்பு


ADDED : ஜன 22, 2025 02:01 AM

Google News

ADDED : ஜன 22, 2025 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, முத்திரை, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.

விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3210 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது சுடுமண் குடுவை, முத்திரை, அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், நீர் ஆகாரங்களை பயன்படுத்தும் குடுவை கிடைத்துள்ளது. இங்கு இதுவரையிலும் 30 க்கும் மேற்பட்ட முத்திரைகள் கிடைத்துள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறியீடுகளை கொண்டுள்ளதால் முன்னோர்கள் குழுக்களாக பிரிந்து வணிகத்தில் ஈடுபட்டது தெரிகிறது. தமிழகத்தில் நடக்கும் பல்வேறு அகழாய்வில் கிடைத்துள்ள சங்கு வளையல்களை விட இங்கு கிடைக்கும் வளையல்கள் நுணுக்கமான அலங்காரங்களை கொண்டுள்ளதாக இருக்கிறது, என்றார்.






      Dinamalar
      Follow us