நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தில் துாய்மை பணியை கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்த குமார் துவக்கி வைத்தார்.
இதில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் ராஜகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாலமுருகன், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் துாய்மை பணியை செய்தனர். அதன் பின் நீதிபதி ஹேமானந்த குமார், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

