/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தேவை அரசுக்கு பணியாளர்கள் வலியுறுத்தல்
/
முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தேவை அரசுக்கு பணியாளர்கள் வலியுறுத்தல்
முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தேவை அரசுக்கு பணியாளர்கள் வலியுறுத்தல்
முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தேவை அரசுக்கு பணியாளர்கள் வலியுறுத்தல்
ADDED : மே 18, 2025 04:40 AM
விருதுநகர்: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சூப்பர் வைசர், ஆப்பரேட்டர், டெக்னீசியன், எக்ஸ்ரே பரிசோதனை உதவியாளர், இதர பணியாளர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
சூப்பர் வைசருக்கு ரூ.12,500, பிற பணியாளர்களுக்கு ரூ.8500 மாத ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தேசிய சுகாதார இயக்கம், மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் உள்ளிட்டவற்றால் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மருத்துவத்துறையில் ஒரே பணியை வெவ்வேறு பிரிவுகளில் செய்யும் பணியாளர்களுக்கு இடையே தமிழக அரசு ஊதிய முரண்பாட்டை கடைபிடித்து வருவதால் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு, குழந்தைகளின் கல்விச் செலவு என பலவற்றை சமாளிக்க அரசு வழங்கும் ஊதியம் போதியதாக இல்லை என்பதால் மருத்துவத்துறையிலேயே மிகவும் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாக மன வருத்தத்திற்கு பணியாளர்கள் ஆளாகியுள்ளனர்.
எனவே முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ஊதிய உயர்வு அரசு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.